உள்ளடக்கத்துக்குச் செல்

சி. வை. தாமோதரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Got rid of useless info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 20 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = சி. வை. தாமோதரம்பிள்ளை<br>C. W. Thamotharampillai
|image = C.W.Thamotharampillai.jpg
|image_size = 150px
|caption = தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி
|birth_name =
|birth_date = [[செப்டம்பர் 12]], [[1832]]
|birth_place =[[சிறுப்பிட்டி]], [[யாழ்ப்பாணம்]], [[பிரித்தானிய இலங்கை]]
|death_date ={{death date and age|1901|1|1|1832|9|12}}
|death_place =[[புரசைவாக்கம்]], [[சென்னை மாகாணம்|மெட்ராஸ் மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for =
|education =கலைமாணி <small>([[சென்னைப் பல்கலைக்கழகம்|மெட்ராஸ் பல்கலைக்கழகம்]], [[1858]])</small><br>
BL (சட்டம்)
|employer =
| occupation = வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதி
| title =
| religion=
| spouse=
|children= [[அழகசுந்தரம்]]
|parents=வைரவநாதபிள்ளை,<br>பெருந்தேவி
|speciality=பதிப்புக் கலை
|relatives=
|signature =
|website=
|}}
'''சி. வை. தாமோதரம்பிள்ளை''' (''C. W. Thamotharampillai'', 12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901) என்னும் '''சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை''' பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். ''தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்'' என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.<ref name="த. இ. க. 1">{{cite book | url=http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=3&pno=3 ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் | title=தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை | publisher=திருமகள் நிலையம் | author=சி.கணேசையர் | pages=3 - 5}}</ref>

==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே [[தமிழ்]] இலக்கண இலக்கியங்களையும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தையும்]] கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய [[பட்டிகோட்டா செமினறி|வட்டுக்கோட்டை செமினறி]]யில் சேர்ந்து, [[அறிவியல்]] துறையிலும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் [[1852]] இல் அயலூரான [[கோப்பாய்|கோப்பாயில்]] போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். இவரது புதல்வர் [[அழகசுந்தரம்|அழகசுந்தரமும்]] தமிழாய்வாளராவார்.<ref>[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D ஈழத்துத் தமிழறிஞர்], மயிலங்கூடலூர் பி. நடராசன், ([[நூலகம் திட்டம்]])
தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே [[தமிழ்]] இலக்கண இலக்கியங்களையும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தையும்]] கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய [[பட்டிகோட்டா செமினறி|வட்டுக்கோட்டை செமினறி]]யில் சேர்ந்து, [[அறிவியல்]] துறையிலும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் [[1852]] இல் அயலூரான [[கோப்பாய்|கோப்பாயில்]] போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். இவரது புதல்வர் [[அழகசுந்தரம்|அழகசுந்தரமும்]] தமிழாய்வாளராவார்.<ref>[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D ஈழத்துத் தமிழறிஞர்], [[மயிலங்கூடலூர் பி. நடராசன்]], ([[நூலகம் திட்டம்]])
</ref>
</ref>


வரிசை 7: வரிசை 40:


==பத்திரிகை ஆசிரியர்==
==பத்திரிகை ஆசிரியர்==
இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய [[யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]]) அதிபராக இருந்த [[பீட்டர் பெர்சிவல்]] பாதிரியார் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] நடத்திவந்த ''தினவர்த்தமானி'' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டு [[சென்னை]] வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.<ref>தாமோதரம், மதுரைப் பலகலைக்கழகம்</ref>
இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய [[யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]]) அதிபராக இருந்த [[பீட்டர் பெர்சிவல்]] பாதிரியார் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] நடத்திவந்த '''''தினவர்த்தமானி''''' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853-ஆம் ஆண்டு [[சென்னை]] வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.<ref>தாமோதரம், மதுரைப் பலகலைக்கழகம்</ref>


==பட்டப்படிப்பு==
==பட்டப்படிப்பு==
[[1858]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக் கழகத்தால்]] நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.<ref name="hindu">{{cite web | url=http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm | title=The first Madras graduate | publisher=[[தி இந்து]] | date=9 ஆகத்து 2004 | accessdate=17 நவம்பர் 2015}}</ref> பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.<ref name="த. இ. க. 1" /> அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் விசாரணைக் கர்த்தர் பதவியும் கிடைத்தது.
[[1858]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக் கழகத்தால்]] நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.<ref name="hindu">{{cite web | url=http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm | title=The first Madras graduate | publisher=[[தி இந்து]] | date=9 ஆகத்து 2004 | accessdate=17 நவம்பர் 2015 | archive-date=2016-01-28 | archive-url=https://web.archive.org/web/20160128195320/http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm |url-status=dead | =https://web.archive.org/web/20160128195320/http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm }}</ref> பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.<ref name="த. இ. க. 1" /> அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் வழக்குரைஞர் பதவியும் கிடைத்தது.


==இராவ்பகதூர் விருது==
==இராவ்பகதூர் விருது==
வரிசை 16: வரிசை 49:


==தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல்==
==தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல்==
பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த [[தொல்காப்பியம்|தொல்காப்பியப்]] பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனை மெச்சி வியந்து பாராட்டாதோர் எவரும் இருந்ததில்லை. அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் நல்கியிருந்தது.<ref>[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழத் தாமோதரனார்], மா. க. ஈழவேந்தன், [[நூலகம் திட்டம்]]</ref>
பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய்க் கருதப்பட்டு வந்த [[தொல்காப்பியம்|தொல்காப்பியப்]] பொருளதிகாரத்தை அர்ப்பணிப்புடனும், கடும் உழைப்பினாலும் தேடிக் கண்டுபிடித்துப், பரிசோதித்து, அச்சிட்டு வெளியிட்டார்.<ref>[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழத் தாமோதரனார்], மா. க. ஈழவேந்தன், [[நூலகம் திட்டம்]]</ref>


==மறைவு==
==மறைவு==
தமது அறுபத்து ஒன்பதாம் வயதில், 1901 சனவரி 1 (சார்வரி ஆண்டு மார்கழி 18) இல் சென்னையில் [[புரசைவாக்கம்]] பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.<ref name="த. இ. க. 1" />
தமது அறுபத்து ஒன்பதாம் வயதில், 1901 சனவரி 1 ([[சார்வரி ஆண்டு]] மார்கழி 18) இல் சென்னையில் [[புரசைவாக்கம்]] பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.<ref name="த. இ. க. 1" />


==நினைவகங்கள்==
==நினைவகங்கள்==
சி. வை. தாமோதரனாரின் உருவச்சிலை ஒன்று அவர் படித்த [[கோப்பாய்]] கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.nanilam.com/?p=7795 | title=சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு விழா | publisher=நானிலம் | accessdate=24 சனவரி 2016}}</ref>
சி. வை. தாமோதரனாரின் உருவச்சிலை ஒன்று அவர் படிப்பித்த [[கோப்பாய்]] கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.nanilam.com/?p=7795 | title=சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு விழா | publisher=நானிலம் | accessdate=24 சனவரி 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>


== நூற்பட்டியல் ==
== நூற்பட்டியல் ==
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களின் பட்டியல்.<ref>http://www.thejaffna.com/jaffna/eminence/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88</ref>
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களின் பட்டியல்.<ref>{{Cite web |url=http://www.thejaffna.com/jaffna/eminence/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-08-26 |archive-date=2013-01-10 |archive-url=https://web.archive.org/web/20130110100113/http://www.thejaffna.com/jaffna/eminence/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 |url-status= }}</ref>


===பதிப்பித்த நூல்கள்===
===பதிப்பித்த நூல்கள்===
வரிசை 52: வரிசை 85:
#விவிலிய விரோதம்
#விவிலிய விரோதம்
#காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)
#காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

==இவரைப் பற்றிய நூல்கள்==
*''தாமோதரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்'', டி. ஏ. ராஜரத்தினம் பிள்ளை, பதிப்பு: என். முனிசாமி முதலியார், 'ஆனந்த போதினி', மதராசு, 1934


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==
வரிசை 63: வரிசை 99:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{Wikiquote|சி. வை. தாமோதரம்பிள்ளை}}
* [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial+Articles&artid=83273&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%u0baa%u0ba4%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0bc1%u0b9a%u0bcd+%u0b9a%u0bc6%u0bae%u0bcd%u0bae%u0bb2%u0bcd+%u0b9a%u0bbf.%u0bb5%u0bc8.%u0ba4%u0bbe%u0bae%u0bcb%u0ba4%u0bb0%u0bae%u0bcd+%u0baa%u0bbf%u0bb3%u0bcd%u0bb3%u0bc8 பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை] - [[தினமணி]] கட்டுரை ஜூலை 6, 2009
* [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial+Articles&artid=83273&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%u0baa%u0ba4%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0bc1%u0b9a%u0bcd+%u0b9a%u0bc6%u0bae%u0bcd%u0bae%u0bb2%u0bcd+%u0b9a%u0bbf.%u0bb5%u0bc8.%u0ba4%u0bbe%u0bae%u0bcb%u0ba4%u0bb0%u0bae%u0bcd+%u0baa%u0bbf%u0bb3%u0bcd%u0bb3%u0bc8 பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }} - [[தினமணி]] கட்டுரை ஜூலை 6, 2009
* [https://www.youtube.com/watch?v=2HCJY0d5G5c சி. வை. தாமோதரம்பிள்ளை], [[லேனா தமிழ்வாணன்]], 28 திசம்பர் 2016, [[நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி]].
{{Authority control}}


[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
வரிசை 74: வரிசை 113:
[[பகுப்பு:1901 இறப்புகள்]]
[[பகுப்பு:1901 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர் வாரியாக தமிழ் நூற்பட்டியல்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர் வாரியாக தமிழ் நூற்பட்டியல்கள்]]
[[பகுப்பு:19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் சுவடி ஆய்வாளர்கள், சேகரிப்பாளர்கள், பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் சுவடி ஆய்வாளர்கள், சேகரிப்பாளர்கள், பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்கள்]]

09:59, 10 சூன் 2023 இல் கடைசித் திருத்தம்

சி. வை. தாமோதரம்பிள்ளை
C. W. Thamotharampillai
தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி
பிறப்புசெப்டம்பர் 12, 1832
சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம், பிரித்தானிய இலங்கை
இறப்புசனவரி 1, 1901(1901-01-01) (அகவை 68)
புரசைவாக்கம், மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா
கல்விகலைமாணி (மெட்ராஸ் பல்கலைக்கழகம், 1858)
BL (சட்டம்)
பணிவழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதி
பெற்றோர்வைரவநாதபிள்ளை,
பெருந்தேவி
பிள்ளைகள்அழகசுந்தரம்

சி. வை. தாமோதரம்பிள்ளை (C. W. Thamotharampillai, 12 செப்டம்பர் 1832 - 1 சனவரி 1901) என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1852 இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். இவரது புதல்வர் அழகசுந்தரமும் தமிழாய்வாளராவார்.[2]

பதிப்புத்துறை முன்னோடி

[தொகு]

1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.[1]

பத்திரிகை ஆசிரியர்

[தொகு]

இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பெர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853-ஆம் ஆண்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.[3]

பட்டப்படிப்பு

[தொகு]

1858 இல் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.[4] பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.[1] அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் வழக்குரைஞர் பதவியும் கிடைத்தது.

இராவ்பகதூர் விருது

[தொகு]

தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.[5]

தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல்

[தொகு]

பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய்க் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அர்ப்பணிப்புடனும், கடும் உழைப்பினாலும் தேடிக் கண்டுபிடித்துப், பரிசோதித்து, அச்சிட்டு வெளியிட்டார்.[6]

மறைவு

[தொகு]

தமது அறுபத்து ஒன்பதாம் வயதில், 1901 சனவரி 1 (சார்வரி ஆண்டு மார்கழி 18) இல் சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.[1]

நினைவகங்கள்

[தொகு]

சி. வை. தாமோதரனாரின் உருவச்சிலை ஒன்று அவர் படிப்பித்த கோப்பாய் கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.[7]

நூற்பட்டியல்

[தொகு]

சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களின் பட்டியல்.[8]

பதிப்பித்த நூல்கள்

[தொகு]
சூளாமணி

தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார். அவற்றில் சில:

  1. நீதிநெறி விளக்கவுரை
  2. தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
  3. வீரசோழியம் (1881)
  4. திருத்தணிகைப் புராணம்
  5. இறையனார் அகப்பொருள்
  6. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
  7. கலித்தொகை
  8. இலக்கண விளக்கம்
  9. சூளாமணி
  10. தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை

இயற்றிய நூல்கள்

[தொகு]
  1. கட்டளைக் கலித்துறை
  2. சைவ மகத்துவம்
  3. வசன சூளாமணி
  4. நட்சத்திர மாலை
  5. ஆறாம் வாசகப் புத்தகம்
  6. ஏழாம் வாசகப் புத்தகம்
  7. ஆதியாகம கீர்த்தனம்
  8. விவிலிய விரோதம்
  9. காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

இவரைப் பற்றிய நூல்கள்

[தொகு]
  • தாமோதரம்பிள்ளை அவர்கள் சரித்திரம், டி. ஏ. ராஜரத்தினம் பிள்ளை, பதிப்பு: என். முனிசாமி முதலியார், 'ஆனந்த போதினி', மதராசு, 1934

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 சி.கணேசையர். ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை. திருமகள் நிலையம். pp. 3–5. {{cite book}}: Check |url= value (help)
  2. ஈழத்துத் தமிழறிஞர், மயிலங்கூடலூர் பி. நடராசன், (நூலகம் திட்டம்)
  3. தாமோதரம், மதுரைப் பலகலைக்கழகம்
  4. "The first Madras graduate". தி இந்து. 9 ஆகத்து 2004. Archived from the original on 2016-01-28. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் , ஆ. சதாசிவம் (தொகுப்பாசிரியர்)
  6. செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழத் தாமோதரனார், மா. க. ஈழவேந்தன், நூலகம் திட்டம்
  7. "சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு விழா". நானிலம். பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வை._தாமோதரம்பிள்ளை&oldid=3734499" இலிருந்து மீள்விக்கப்பட்டது