உள்ளடக்கத்துக்குச் செல்

ராமாச்சாரி கே. வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:சௌராட்டிரர்]]
[[பகுப்பு:சௌராட்டிரர்]]
[[பகுப்பு:1861 பிறப்புகள்]]
[[பகுப்பு:1861 பிறப்புகள்]]
[[பகுப்பு:1926 இறப்புகள்]]

10:41, 11 மே 2013 இல் நிலவும் திருத்தம்

இராவ் சாகேப். கே. வி. இராமாச்சாரி (1861-1926) சௌராட்டிர சமூக மக்கள் பட்டு நெசவுத்தொழில் மற்றும் சாயத்தொழிலிலும் ஈடுபட்டதால் மாறி வரும் சூழ்நிலை மற்றும் காலத்திற்கு ஏற்ப கல்வி, அரசியல் இவற்றின் முக்கியத்துவத்தை தம் மக்களுக்கு முதன் முதலில் உணர்த்தியவர்.

பி.ஏ பட்டம் பெற்ற இராமாச்சாரி சௌராட்டிர சமூகத்தின் சென்னை மாகாண அளவில் முதல் பட்டதாரி ஆவார். கல்வியில் பின்தங்கிய சமூகத்தில் ’சௌராட்டிர பிராமண’ என்ற பெயரைச் சேர்த்த பெருமை இவருக்குரியது. இதற்காக பொதுத்துறை இயக்குனர் தனி ஆணை பிறப்பித்து உத்தரவு இட்டது. (Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901). தமது பொதுச்சேவையால் அனைத்து சௌராட்டிரர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றார். 1910ல் மதுரை நகர்மன்றத்தின் தலைவர் ஆனார். சௌராட்டிரர் வரலாற்றில் முதன் முதலில் ஒரு நகர் மன்ற தலைவர் பதவியை வகித்தவர் இவர்தான். அனைத்து சமூகத்தவர்களும் பாராட்டும் வண்ணம் திறம்பட மதுரை நகர் மன்றத்தை நிர்வாகம் செய்தார். சென்ன மாகாண சட்டமன்றத்திற்கு மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சௌராட்டிரர் என்ற பெருமை பெற்றவர். 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பிற சமூகத்தவர்கள் இவரை ”சேர்மன் இராமாச்சாரி” என்றும் ”சௌராட்டிர சமூகத்தின் மேன்மகன்” (Gentleman of Sourashtra Community) என்றும் அழைத்தனர்.

குறிப்புதவி

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமாச்சாரி_கே._வி&oldid=1419862" இலிருந்து மீள்விக்கப்பட்டது